132 பேரை பலிகொண்ட சீன விமானம் திட்டமிட்டே விபத்துக்குள்ளாக்கப்பட்டதா? கருப்புப் பெட்டியின் பதிவுகளை ஆய்வு செய்த அமெரிக்க நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்..!

கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி 132 பயணிகளுடன் விழுந்து நொறுங்கிய சீன விமான விபத்து குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்த அமெரிக்க அதிகாரிகள் அந்த விமானம் இறுதிக் கணங்களில் வேண்டுமென்றே செங்குத்தாக தரையை நோக்கி செலுத்தப்பட்டதாக கண்டறிந்துள்ளனர்.

விமானியின் அறையில் உள்ள யாரோ கட்டளையிட அந்த விமானம் அப்படி தரையை நோக்கி செலுத்தப்பட்டது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 29 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து 90 டிகிரி கோணத்தில் அந்த விமானம் சில நிமிடங்களில் தரையில் விழுந்தது.

விமானத்தில் தீப்பிடித்த நிலையில் அது மலைப்பகுதியில் விழுந்து விட்டது. யாராவது பலவந்தமாக விமானியின் அறைக்குள் நுழைந்து விமானத்தை விழச் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.