18/05/2022 கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1829 பேர் பாதிப்பு – 2549 பேர் டிஸ்சார்ஜ்!!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1829 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன்,  2549 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கொரோனா தொற்று தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,  கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,829 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,27,199 ஆக உயர்ந்தது. தினசரி பாதிப்பு 0.42 சதவிகிதமாக உள்ளது.

நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 33 பேர் இறந்துள்ளனர். இதுவரை நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,293 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் 2,549 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,25,87,259 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 15,647 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில்  இதுவரை 1,91,65,00,770 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 14,97,695  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.