காதலனுக்காக நடுரோட்டில் மோதிக்கொண்ட மாணவியர்| Dinamalar

பெங்களூரு : பெங்களூரில், காதலனுக்காக பள்ளி மாணவியர் இருவர் நடுரோட்டில் சரமாரியாக தாக்கி சண்டை போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூரில் தனியார் பள்ளியில் படிக்கும் இரு மாணவியர் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். சாலை ஓரத்தில் நடந்து சென்ற இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டே சென்றனர். திடீரென ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் விலக்கி விட முயன்றும் முடியவில்லை.

சிலர் இதை ‘வீடியோ’ எடுத்த நிலையில், இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். ஒரே நபரை இரு மாணவியரும் காதலிப்பதால் மோதல் ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.