திடீரென வண்டிக்குள் புகுந்த பாம்பு.. படம் காட்டியதால் படபடப்பான ஆசிரியர்..

திருப்பூர் மாவட்டம் வஞ்சிப்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த ஆசிரியரின் இருசக்கர வாகனத்தில் இருந்த 4 அடி நீள நல்ல பாம்பை, பாம்பு பிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.

ஆசிரியர் துரையரசன் பள்ளி முடிந்து தனது பைக்கை எடுக்க சென்ற  போது வண்டியின் முன்புறத்தில் நாகப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து பாம்பு பிடி வீரர்கள் வரவழைக்கப்பட்டு பாம்பு பத்திரமாக பிடித்துச்செல்லப்பட்டது. பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.