'தெரு நாய்களுக்கு உணவு உண்ணும் உரிமை உண்டு' – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்கான வழிகாட்டுதல்களை பிறப்பித்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்கு தடை விதிக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் வழிகாட்டு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த தடையால் தெரு நாய்களுக்கு உணவு வழங்குவதில் ஏற்பட்ட சிரமங்கள் குறித்து தன்னார்வலர்கள் மனுவாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, “விலங்கு பிரியர்கள் தெரு நாய்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதை தடுத்தன் விளைவாக, நாய்கள் உயிரிழந்தன. தெரு நாய்களுக்கு உணவு உண்ணும் உரிமை உண்டு. அதேபோல், விலங்குகளுக்கு உணவளிக்க குடிமக்களுக்கும் உரிமை உண்டு” என்று தங்கள் தீர்ப்பில் சுட்டிக்காட்டினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.