ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் எல்பிடபிள்யூ அவுட் ஆனதால், கடுமையாக கோபமடைந்தார்.
உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல், டிரஸ்ஸிங் அறைக்கு சென்றதும் அவர் தனது ஹெல்மெட்டை வீசி, பின்னர் பேட்டை அடித்து நொறுக்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
இப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் துடுப்பாடியது. மூன்றாவதாக களமிறங்கிய மேத்யூ வேட், 12 பந்துகளில் 16 ஓட்டங்களில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்திருந்தார்.
ஆனால் கிளென் மேக்ஸ்வெல் வீசிய 6-வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்வீப் செய்ய முயற்சியில் வேட் பந்தை தவறவிட்டார். அப்பந்து அவரது லெக் பெடில் பட்டு அவருக்கு எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது.
ஆனால் மேத்யூ வேட் மட்டைக்கும் பந்துக்கும் இடையே ஏதோ தொடர்பு இருப்பதாக நம்பி டிஆர்எஸ் கேட்டார்.
தொழில்நுட்பத்தில் சில தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதா என தெரியவில்லை, அல்ட்ராஎட்ஜால் அதனை கண்டறிய முடியவில்லை, மேலும் பந்து மட்டையைக் கடக்கும்போது அது ஸ்பைக்கைக் காட்டவில்லை, மூன்றாவது நடுவரும் அதை அவுட் கொடுத்தார்.
இதனால், மேத்யூ வேட் பயங்கரமாக கோபமடைந்தார். அப்போது, மைதானத்திலேயே விராட் கோஹ்லி அவரை சமாதானப்படுத்த முயன்றார்.
மீன் பிடிப்பதில் உலக சாதனையை முறியடித்த 11 வயது பிரித்தானிய சிறுவன்!
ஆனாலும் அவர் டிரஸ்ஸிங் அறைக்குள் நுழைந்ததும், அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை. அவர் தனது ஹெல்மெட்டை தூக்கி எறிந்துவிட்டு டிரஸ்ஸிங் அறைக்குள் பலமுறை மட்டையை அடித்து நொறுக்கினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவிவருகிறது.
#RCBvGT
Matthew Wade reaction in dugout 😳 pic.twitter.com/IRaCB0XJqz— Anmol Dixit (@AnmolDi59769126) May 19, 2022
தண்ணி காட்டிய வங்கதேசத்திற்கு செக் வைத்த இலங்கை! டிராவில் முடிந்த டெஸ்ட்