பாமாயில் ஏற்றுமதி தடை நீக்கம்இந்தோனேஷியா அறிவிப்பு| Dinamalar

ஜாகர்தா,-இந்தோனேஷிய அரசு, 23ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உள்ளதாக அறிவித்துஉள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, பாமாயில் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் உள்நாட்டில் பாமாயில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த மாதம் அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து பனை விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் பாமாயில் கையிருப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

அடுத்த 10 நாட்களில் தேவைக்கு மேல் பாமாயில் உற்பத்தியாகி, சேமிக்க இடவசதி இல்லாத நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், நிதியமைச்சர், ஸ்ரீ முல்யானி இந்திராவதியை சந்தித்த பார்லி., பட்ஜெட் குழு உறுப்பினர்கள் பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ, 23ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக நேற்று அறிவித்தார். ‘இதனால் சர்வதேச சந்தையில் பாமாயில் விலை கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.