இலங்கைக்கான விசேட பயண ஆலோசனையை வெளியிட்டது தென் கொரியா!


இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள பின்னணியில் தென் கொரியா இலங்கைக்கான சிறப்பு பயண ஆலோசனையை இன்று வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரிய பிரஜைகள் இலங்கைக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை இரத்து செய்யவோ அல்லது தாமதப்படுத்தவோ அல்லது ஏற்கனவே இலங்கையில் இருந்தால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே தென் கொரியா இலங்கைக்கான சிறப்பு பயண ஆலோசனையை இன்று வெளியிட்டுள்ளது.  

இலங்கைக்கான விசேட பயண ஆலோசனையை வெளியிட்டது தென் கொரியா!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.