ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானுக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை

மும்பை:
மும்பை பிரபோர்னே மைதானத்தில் இன்று நடைபெற்று 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். 
தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டெவோன் கான்வே 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 
ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மொயின் அலி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். 
டிரென்ட் போல்ட் வீசிய ஓவரில் மொயின் அலி 26 ரன்கள் குவித்தார்.  தொடர்ந்து விளையாடி அவர், 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். 
எனினும்  ராயுடு 3 ரன்னுக்கும், ஜெகதீசன் ஒரு ரன் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.  கேப்டன் தோனி 26 ரன்கள் அடித்து அவுட்டானார். 
ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக சாஹல் 2 விக்கெட்களையும், ஓபேட் மெக்காய் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். 
20 ஓவர் முடிவில் சென்னை அணி 6  விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 151 ரன்கள் என்றை இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களம் இறங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.