நாணயக்கொள்கை மீளாய்வு : இல. 04 – 2022 மே

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மே 18ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 13.50 சதவீதம் மற்றும் 14.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

அண்மைய காலத்தில் பணவீக்கம் உயர்வடைந்து காணப்படுமென எறிவுசெய்யப்பட்ட போதிலும் 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் சபையினால் எடுக்கப்பட்ட கணிசமான கொள்கைசார்ந்த வழிமுறைகள், திரண்ட கேள்வி அழுத்தங்கள் உறுதியடைவதைக் குறைப்பதற்கான ஏனைய வழிமுறைகளுடன் ஒன்றிணைந்து எதிர்வரவுள்ள காலப்பகுதியில் பணவீக்க எதிர்பார்க்கைகள் மேலும் உயர்வடைவதனை கட்டுப்படுத்துவமற்கும் பணவீக்க அழுத்தங்களை தளர்த்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதென நாணயச்சபை கருதுகின்றது.

முழுவடிவம்

https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/press/pr/press_20220519_Monetary_Policy_Review_No_4_2022_t.pdf

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.