ரூ.1,500 கோடிஹெராயின் பறிமுதல்| Dinamalar

கொச்சி : லட்சத்தீவில் 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 218 கிலோ ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.அரபிக் கடலின் இந்தியப் பகுதியில் சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இந்திய கடலோர காவல்படை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை இணைந்து தீவிரமாக கண்காணித்து வந்தன. நேற்று, இந்திய கடல் எல்லைக்குள், இரண்டு படகுகள் நுழைந்து லட்சத்தீவு அகட்டி கடற்கரை பகுதிக்கு வந்த போது, அதிகாரிகள் அவற்றில் அதிரடி சோதனை நடத்தினர். இரண்டு படகுகளில் இருந்தும் 1,526 கோடி ரூபாய் மதிப்புள்ள 218 கிலோ ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்தனர். படகுகளில் வந்த சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.