ஒரு லாரி எண்ணுக்கு வழங்கப்பட்ட அனுமதி.. அதே எண்ணில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டி ஏராளமான லாரிகள் மணல் கொள்ளை.!

தஞ்சை மருவூர் மணல் குவாரியில், ஒரு லாரி எண்ணுக்கு எடுக்கப்பட்ட பர்மிட்டை வைத்து அதே எண்ணில் போலியாக ஸ்டிக்கர் அடித்து மற்ற லாரிகளில் ஒட்டி மணல் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை போலீசார் பிடித்தனர்.

குவாரியில் மணல் அள்ள ஆன்லைன் மூலம் அனுமதி பெறுவது அவசியம் என்ற நிலையில், உரிய அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கிருந்து லாரிகளில் தப்ப முயன்றவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, லாரியின் நம்பர் பிளேட்டில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.