சாரை சாரையாக சரணடைந்த உக்ரைன் வீரர்கள்! மரியுபோலை தட்டி தூக்கிய ரஷ்யா… முக்கிய தகவல்


உக்ரைனின் மரியுபோல் நகரை முழுமையாக தட்டி தூக்கி கைப்பற்றியுள்ளது ரஷ்ய ராணுவம்.

மேலும் நகரின் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

சரணடைந்த உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரம் முழுவதும் ரஷ்ய படைகள் வசம் வந்துவிட்டது என ரஷ்யா ராணுவம் தெரிவித்துள்ளது.

சாரை சாரையாக சரணடைந்த உக்ரைன் வீரர்கள்! மரியுபோலை தட்டி தூக்கிய ரஷ்யா... முக்கிய தகவல்

REUTERS

மேலும், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் அங்கு உக்கிரமான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது.
அந்நாட்டின் போர் விமானங்கள் அங்கு குண்டுமழை பொழிந்து வருவதாக தெரியவந்துள்ளது.

மரியுபோல் முழுவதுமாக கையகப்படுத்தப்பட்டது புடினுக்கு அவர் பிப்ரவரி 24 அன்று தொடங்கிய போரில் மிகவும் அவசியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தொடர்ந்து பல பகுதிகளில் உக்ரைன் படைகளிடம் ரஷ்ய படையினர் உதைபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

சாரை சாரையாக சரணடைந்த உக்ரைன் வீரர்கள்! மரியுபோலை தட்டி தூக்கிய ரஷ்யா... முக்கிய தகவல்

AP Photo



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.