தொடர் கனமழை, வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்களில் தஞ்சம் புகும் குடும்பங்கள்..! அசாம் மாநிலத்தில் அவலம்

தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில் ஜமுனாமுக் என்ற மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ரயில் தண்டவாளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக அம்மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், 29 மாவட்டங்களில் உள்ள எட்டு லட்சம் பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

ராணுவம், பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பல இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், தாழ்வான பகுதியில் வாழும் மக்கள், மேடான பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் உள்ளிட்ட இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.