புனேயில் லால் மகாலில் நடனமாடி அந்த வீடியோவைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நடனக் கலைஞர் மீது வழக்குப் பதிவு.!

புனேயில் சத்திரபதி சிவாஜி வரலாற்றுடன் தொடர்புள்ள லால் மகாலில் நடனமாடி அந்த வீடியோவைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நடனக் கலைஞர் வைஷ்ணவி பாட்டீல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் புனேயில் உள்ள லால் மகால் என்னும் கட்டடத்தில் சிவாஜி தனது இளமைக் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டடத்தில் நடனமாடிய வைஷ்ணவி பாட்டீல் அதைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

லால் மகாலில் நடனமாடியதற்குப் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்த நிலையில் நடனக் கலைஞர் வைஷ்ணவி பாட்டீல் உள்ளிட்ட நால்வர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.