எங்களுக்கு மன்னிக்கும் குணத்தை கற்று தந்தவர் ராஜீவ்காந்தி என்று அவரின் மகன் ராகும்காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி மனித வெடிகுண்டு தாக்குதலில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார்.
இன்று அவரின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் ஆகும்.
இதையடுத்து அவரின் மகன் ராகுல்காந்தி தந்தையை நினைவுகூர்ந்துள்ளார், மேலும் பேரறிவாளன் விடுதலை குறித்து மறைமுக கருத்தையும் வெளியிட்டுள்ளார்.
My father was a visionary leader whose policies helped shape modern India.
He was a compassionate & kind man, and a wonderful father to me and Priyanka, who taught us the value of forgiveness and empathy.
I dearly miss him and fondly remember the time we spent together. pic.twitter.com/jjiLl8BpMs
— Rahul Gandhi (@RahulGandhi) May 21, 2022
ராகுகாந்தியின் டுவிட்டர் பதிவில், நவீன இந்தியாவை உருவாக்கத் தேவையான கொள்கைகளை கொண்ட தொலைநோக்கு பார்வை கொண்ட சிறந்த தலைவர் எனது தந்தை என்றும், தந்தை ராஜிவ் காந்தி இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதராக திகழ்ந்தார் என்றும், எனக்கும், எனது சகோதரி பிரியங்கா காந்திக்கும் மன்னிக்க கற்றுக் கொடுத்தவர் என்று டுவிட் போட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்க்கும் நிலையில் ராகுல்காந்தி இவ்வாறான டுவீட்டை போட்டுள்ளார்.