மருந்தகத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழப்பு.. தப்பியோடிய போலி மருத்துவர்..

கடலூர் மாவட்டம் வேப்பூரில் மருந்தகத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், தப்பியோடிய போலி மருத்துவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது மகள் லட்சிதாவை கடந்த 7ம் தேதி காய்ச்சல், சளி காரணமாக வேப்பூரில் உள்ள தனியார் மருந்தகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் சத்தியசீலன் சிறுமிக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்திருக்கிறார்.

சில மணி நேரங்களிலேயே சிறுமியின் உடல்நிலை மோசமான நிலையில், அவர் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.