முதல் நாள் சிறையில் இரவு உணவை தவிர்த்த சித்து..!

பாட்டியாலா சிறையில் அடைக்கபட்டுள்ள பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, இரவு உணவை தவிர்த்து மருந்துகளை மட்டும் எடுத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாது என்றும், மற்ற கைதிகளைப் போல் அவரும் வேலை செய்தாக வேண்டும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினக்கூலியாக, அவருக்கு 40 முதல் 60 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சித்துவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட அகாலி தளம் கட்சியின் பைக்ரம் சிங்-கும்  (Bikram Singh Majithia) இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.