டி.ஜே நிகழ்ச்சியில் அதிகமாக மது மற்றும் போதை மருந்து அருந்திய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!

சென்னை வி.ஆர்.மாலில் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை எடுத்துக் கொண்ட 23 வயது மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மயங்கிய நிலையில், அரசு இராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற அந்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

விசாரணையில் அண்ணாநகர் வி.ஆர்.மாலில் உரிய அனுமதியின்றி நடந்ததாகக் கூறப்படும் டி.ஜே எனப்படும் இசை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றது தெரியவந்தது.

அங்கு வழங்கப்பட்ட மது மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை அதிகளவில் அவர் எடுத்துக்கொண்டதால் மயங்கியதும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான விக்னேஷ், மார்க், பரத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கிருந்து  800க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.