தண்ணீர் பாட்டிலுக்குள் மிதந்த செத்த பல்லி… ஆசை பாட்டிலில் அதிர்ச்சி… கோவில் வளாகத்தில் பரபரப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பக்தர் ஒருவர் வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சையைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வழிபாடு செய்வதற்காக வந்துள்ளார். கோவில் வளாகத்தில் சிறுவன் ஒருவன் விற்றுக் கொண்டிருந்த “ஆசை” என்ற பெயர் நிறுவனத்தின் தண்ணீர் பாட்டிலை வாங்கியுள்ளார்.

அதில் பல்லி ஒன்று இறந்து மிதந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் புகாரளிக்கவுள்ளதாகக் கூறிய பழனிசாமி, கோவில் வளாகத்தில் விற்கப்படும் பொருட்களின் தரத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.