தொடர்ந்து உயர்ந்து வரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்.. முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்ப்பு..!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை நெருங்கியது.

விரைவில் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு காலை நிலவரப்படி,  விநாடிக்கு 25 ஆயிரத்து  161 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று 46 ஆயிரத்து 436 கன அடியாக இருந்த நீர் வரத்து, தற்போது குறைந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 116.67 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 88.25 டி.எம்.சி ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1,500 அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

இதனிடையே, ஒகேனக்கல் அருகே தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று 30 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 15 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.