பெட்ரோல் பங்க் திறப்பு நிகழ்ச்சி… ஓபிஎஸ் வருவதற்குள் பரிசுப் பொருட்களை அள்ளிச் சென்ற மக்கள்… இடமே களேபரம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்ற புதிய பெட்ரோல் பங்க் திறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படவிருந்த பரிசுப் பொருட்களை அப்பகுதி மக்கள் போட்டிபோட்டுக் கொண்டு அள்ளிச் சென்றதால் அந்த இடமே களேபரமானது.

பாலப்பாடி கிராமத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் கைகளால் சுமார் 20 ஆயிரம் பேருக்கு தென்னங்கன்றுகள், இஸ்திரி பெட்டிகள், வேட்டி சேலை, சீர்வரிசைப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படவிருந்தன.

ஆனால் ஓ.பி.எஸ் நிகழ்ச்சி அரங்குக்குள் வந்து சேர்வதற்குள் அங்கிருந்த மக்கள் பரிசுப் பொருட்களை நீ, நான் என போட்டிபோட்டு அள்ளிச் சென்றனர். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.