நீமுச் : மத்திய பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை, ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை கேட்டு அடித்துக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ரட்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் பவார்லால் ஜெயின், ௬௫. மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், சமீபத்தில் மாயமானார்.
அவரை தேடியதில், நீமுச் மாவட்டத்தில் சாலையோரத்தில் பிணமாக கிடந்தார். இந்நிலையில், பவார்லால் மகனின் மொபைலுக்கு, ‘வாட்ஸ் ஆப்’ பில் ஒரு ‘வீடியோ’ வந்தது. அதில், பவார்லாலிடம், ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாளங்களை கேட்டு, ஒருவர் அவரை சரமாரியாக அடிப்பது பதிவாகிஇருந்தது. பவார்லால் மகன் போலீசில் புகார் தரவே, விசாரணையில், பவார்லாலை அடித்து கொலை செய்தது தினேஷ் குஷ்வாஹா, ௩௮, என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
நீமுச் : மத்திய பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை, ஆதார் அட்டை உள்ளிட்ட விபரங்களை கேட்டு அடித்துக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.