மனைவியை கொலைச் செய்ய முயன்ற கணவனை காவல்துறையினர் கைடு செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், சிறுதலைக்காடு, பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு திருமணமாகி தனபாக்கியம் என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. தனபாக்கியம் மீது குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனைவியின் கையை பின் பக்கத்தில் வைத்து கட்டி வாயில் பூச்சி மருந்து எடுத்து தண்ணீருடன் கலந்து வாயில் ஊற்றினார்.
தனபாக்கியத்தின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.