மீண்டும் திருணாமுல் காங்கிரஸில் இணைந்த பாஜக எம் பி

கொல்கத்தா

மேற்கு வங்க மாநில பாஜக எம்பி அர்ஜுன் சிங் மீண்டும் திருணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.

மேற்கு வங்கத்தில் பல திருணாமுல் காங்கிரஸ்  தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.   அவர்களில் பலருக்குத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்தது.  மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் திருணாமுல் அபார வெற்றி பெற்று மீண்டும் மேற்கு வங்கத்தில்  ஆட்சியைப் பிடித்தது.

தற்போது பாஜகவில் இணைந்த பல தலைவர்கள் திருணாமுல் காங்கிரஸுக்கு திரும்பி வரத் தொடங்கி உள்ளனர்.  அவ்வகையில் திருணாமுல் காங்கிரஸில் அரசியல் பயணத்தை தொ ங்கிய அர்ஜுன் சிங் கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

அவர் பாஜக சார்பில் பாரக்புரா தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.   அவர் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திருணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார்.  இன்று அவர் திருணாமுல் தேசிய செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.