TNPSC Group 2: தற்காலிக ‘ஆன்சர் கீ’ எப்போது? ஆட்சேபம் தெரிவிக்க ஒரு வாரம் அவகாசம்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான ஆன்சர் கீ இன்னும் 5 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்காக குரூப் 2 தேர்வு நேற்று நடைபெற்றது.

5413 காலிப்பணியிடங்களுக்கான இந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழூதிய நிலையில், 1.83 லட்சம்பேர் தேர்வுக்கு வரவில்லை. இந்நிலையில், குரூப் 2 தேர்வில் பல கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், ஒருசில கேள்விகள் தவறாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த தகவலை மறுத்த டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வில். தவறான கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. குரூப் 2 தேர்வின் கேள்வி, மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது. தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் 5 நாட்களுக்குள் வெளியிடப்படும்.

விடைக்குறிப்பு மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை வழங்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.