ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்| Dinamalar

ஷிவமொகா : ஷிவமொகாவில் ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.

கர்நாடக மாநிலம் ஷிவமொகா மாவட்டம், பத்ராவதி தாலுகா, கடசா கிராமத்தை சேர்ந்தவர் ஆரிப், 30. இவரது மனைவி அல்மா பானு, 27. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. நிறைமாத கர்ப்பிணியான அல்மா பானு, பிரசவத்துக்காக ஷிவமொகாவின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. இரண்டு ஆண், இரண்டு பெண் என நான்கு குழந்தைகள் பிறந்தன. தாயும், குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். குடும்பத்தினர் மட்டுமின்றி, மருத்துவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.