மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை அவரது பயணத்தடையை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷன கெகுனாவெல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பல நிதி மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மனுவை முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ளார்.