கேரளாவில் பணி ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு| Dinamalar

மூணாறு: கேரளாவில் தேயிலை, ஏலம், காபி, ரப்பர் தோட்டங்களில் 3.5 லட்சம் தொழிலாளர்கள் நிரந்தரப்பணியில் உள்ளனர். அவர்கள் பணி ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது.

2022 ஏப்., 1 முதல் இந்த உத்தரவு அமலானது. மூணாறில் 15 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். பிரபல தனியார் தேயிலை கம்பெனியில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வட மாநிலங்களில் இருந்து அழைத்து வருகின்றனர். ஓய்வு பெறுவோரை மீண்டும் பணி அமர்த்துகின்றனர்.

அரசின் உத்தரவால் தற்போது ஆறுதல் அடைந்துள்ளனர்.குறிப்பாக தமிழக பூர்வீக தொழிலாளர்கள் அதிகமானோருக்கு தமிழகம், கேரளாவில் வீடுகள் இல்லை. அவர்கள் பணி ஓய்வு பெறும் போது நிர்வாகத்திற்குச் சொந்தமான வீடுகளை ஒப்படைத்தால் மட்டுமே ஓய்வூதியம் உள்பட சலுகைகள் கிடைக்கும். இந்நிலையில் அரசின் உத்தரவால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.