சாதாரண தரப் பரீட்சைக்கு 15 கைதிகள் தோற்றவிருப்பதாக தெரிவிப்பு

இன்று (23)ஆரம்பமாகும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 15 கைதிகள் தயாராக இருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து ஒரு கைதியும், நிவ் மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கைதிகள் நால்வரும், வட்டரெக சிறைச்சாலை சுனிதா பாடசாலையில் 10 மாணவ குற்றவாளிகள் அடங்கலாக 15 கைதிகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நிவ் மகசின் சிறைச்சாலை மற்றும் வட்டரெக சிறைச்சாலை சுனிதா பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.