சென்னை அருகே கலப்பட எண்ணெயை பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது..!

சென்னையை அடுத்த அம்பத்தூர் மற்றும்  திருநின்றவூர் பகுதியில் கலப்பட எண்ணெய் பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் கள்ளச்சந்தையில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூரில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாருக்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து தனிப்படையினர் பட்டரவாக்கம் மற்றும் திருநின்றவூர் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தியதில் இரு கிடங்குகளில் எவ்வித ஆவணமும் இன்றி கலப்பட எண்ணெய், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை வைத்திருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து 18 ஆயிரத்து 200லிட்டர் கலப்பட எண்ணெய்,1100லிட்டர் பெட்ரோல், 200 லிட்டர் டீசல் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.