ஜேர்மனியில் கடந்த வார இறுதியில் வேடிக்கை நிகழ்ச்சி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அப்பாவி ஒருவர் கொல்லப்பட்டது தொட்ரபில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜேர்மனியில் கொலோனின் கிழக்கே லுடென்ஷெய்டில் சனிக்கிழமை மாலை ஒரு வேடிக்கை நிகழ்ச்சியில் 40 வயதுடைய ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
உள்ளூர் கொலைக் கமிஷன் மற்றும் குற்றவியல் பொலிஸ் படை விசாரணையை மேற்கொண்டது மற்றும் சாட்சிகளிடமிருந்து கூடுதல் தகவல்களைக் கேட்டது.
16 முதல் 20 வயதுக்குட்பட்டதாகக் கருதப்படும் ஆறு இளைஞர்களைக் கொண்ட குழு, 16 வயது இளைஞனுடன் ஏற்பட்ட உடல் ரீதியான மோதல் இந்த துப்பாக்கிச்சூட்டில் அடித்தளமாக அமைந்துள்ளது.
ஆறு இளைஞர்களிடமிருந்து அடியை வாங்கிக்கொண்டு அங்கிருந்த சென்ற 16 வயது சிறுவன் சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, அந்தக் குழுவை மீண்டும் எதிர்கொள்ள தன் தந்தையுடன் திரும்பி வந்துள்ளான்.
வட ஆபிரிக்கா அல்லது மத்திய கிழக்குத் தோற்றத்தைக் கொண்டவர்களை விவரிக்க ஜேர்மன் அதிகாரிகளால் அடிக்கடி பயன்படுத்தப்படும் “தெற்குத் தோற்றம்” என்று காவல்துறை விவரித்த அந்த ஆறு இளைஞர்கள் தப்பி ஓட முயன்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன
அவர்கள் ஓடுகையில், இரு இளைஞர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் நம்புகின்றனர், ஒருவர் எச்சரிக்கை மற்றும் சமிக்ஞை ஆயுதத்தைப் பயன்படுத்தியும், மற்றொருவர் உண்மையான துப்பாக்கியைப் பயன்படுத்தியும் சுட்டனர்.
துப்பாக்கிச் சூடு இருவரும் வானத்தை நோக்கிச் சுடப்பட்டதாகவும், பின்தொடர்ந்த 16 வயது மற்றும் அவரது 52 வயதான தந்தையின் திசையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது நிகழ்ச்சி நடந்த திடலில் இருந்து அந்த குழு வெளியேறும்போது, கம்மர்ஸ்பேக்கைச் சேர்ந்த 40 வயது நபரை தவறுத்தலாகா சுட்டனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு எந்தக் குழுக்களுடனும் தொடர்பு இருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, அதுகுறித்து விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.