படகில் தீ; 7 பேர் பலி| Dinamalar

மணிலா: பிலிப்பைன்சில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏழு பேர் உயிரிழந்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் பொலிலியோ தீவில் இருந்து, ரியல் துறைமுகம் நோக்கி இன்று(மே 23) ஒரு படகு சென்றது. அதில், 134 பயணியர் இருந்தனர். திடீரென படகின் இன்ஜினில் தீப்பற்றி, படகு முழுதும் பரவியது. தீயில் இருந்து தப்பிக்க, பயணியர் கடலில் குதித்தனர். ஆனால், தீயில் சிக்கிய ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். கடலில் குதித்தவர்களில் 120 பேர் மீட்கப்பட்டனர். காணாமல் போன ஏழு பேரை தேடும் பணி நடக்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.