புதிய அமைச்சரவை பேச்சாளரும், இணைப் பேச்சாளர்களும் நியமனம்

புதிய அமைச்சரவை பேச்சாளர் ஒருவர் மற்றும் இணை அமைச்சரவை பேச்சாளர்கள் மூவர் இன்று (23) கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைச்சரவை பேச்சாளராக வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் பெயரிடப்பட்டுள்ளார்.

விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இணை அமைச்சரவை பேச்சாளர்களாவர்.

மொஹான் சமரநாயக்க
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.