மதிய உணவு பணியாளர்களுக்குதுணை நிற்போம்| Dinamalar

பெங்களூரு : ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மதிய உணவு ஊழியர்களுக்கு ஆதரவாக நிற்போம். அவர்களின் நலன் காப்போம்,” என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:எந்தவிதி நிதியுதவியும் இன்றி, 2022 மார்ச் 31ல், 60 வயது கடந்த 11 ஆயிரம் மதிய உணவு பணியாளர்களை வேலைக்கு அழைக்க வேண்டாம் என பள்ளி முதல்வர்களுக்கு உத்தரவிட்டது சரியல்ல.

அவர்களுக்கு பென்ஷன், நிதியுதவி என எந்த உதவியும் செய்யாமல் விட்டது சரியல்ல. நம் குழந்தைகளுக்காக பல ஆண்டுகளாக வேலை செய்தவர்களை, ஒரு நாள் வராதீர்கள் என்பதா? அவர்களுக்கு அரசு காட்டும் மரியாதை இது தானா.அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மதிய உணவு பணியாளர்களுக்கு, துணையாக நிற்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.