மே 25ந்தேதி  இளைஞர் திறன் திருவிழா! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்…

சென்னை: மே 25ந்தேதி  இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில், அதிக வேலைவாய்ப்பு உள்ள தொழில்களை இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படுகிறது.  மேலும், திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை பெற உதவும் வகையிலும் திருவிழா நடத்தப்படுகிறது  இதற்கான ஏற்பாடுகளை தமிழகஅரசு செய்து வருகிறது. அதன்படி,  சென்னையில் மே 25ந்தேதி  இளைஞர் திறன் திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழா சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர் கணேசன் உள்பட பலர் பங்கேற் உள்ளனர்.

ஆண்டுதோறும்  உலக இளைஞர் திறன் நாள் ஜூலை 15-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஜூலை 8-ஆம் தேதி முதல் 15- ஆம் தேதி வரை தொழில்நெறி விழிப்புணர்வுத் திறன் வாரமாக கொண்டாட மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மே 25ந்தேதி அன்று இளைஞர் திறன் திருவிழாவை தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.