15 மணித்தியால மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது

எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல்வாதிகள் யாருடைய ஆலோசனையின் பேரில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் என்பது தெரியவில்லை என்று கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன், இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறுகின்ற நேரத்தில் மற்றும் இன்று (23) மாலை 06.30 மணி முதல் ஜூன் மாதம் 01 ஆம் திகதி வரை மின் துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து இழந்த 260 மெகாவோட் மின்சாரம் இன்று முதல் தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ளதாகவும் இவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.