அதிகபட்ச எரிபொருள் கொள்வனவு வரையறையில் மாற்றம்

வாகனங்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச எரிபொருள் வரையறையில் இன்று (24) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதனால் ,இதுவரையிலும் இருந்துவந்த  எரிபொருள் கொள்வனவு வரையறையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

அதற்கமைவாக மோட்டார் சைக்கிள்களுக்கு இரண்டாயிரத்து 500 ரூபாவுக்கும் , முச்சக்கர வண்டிகளுக்கு மூவாயிரம் ரூபாவுக்கும், கார், வேன்களுக்கு 10ஆயிரம் ரூபாவுக்கும எரிபொருள் வழங்கப்படும்.

மண்ணெண்ணெய் விலையை அதிகரிப்பதற்கு நேற்றைய தினம் அனுமதி கோரப்பட்ட போதிலும், நிலவும் சூழ்நிலை காரணமாக அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.