கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழகஅரசு வழங்கும் கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வீர தீர செயல்களில் சிறந்து விளக்கும் பெண்களுக்கு தமிழகஅரசு கல்பனா சாவ்லா விருது   ஆண்டுதோறும் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்தியாவில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற விண்வெளி வீரங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவாக தமிழ்நாட்டில் வீர, தீர, சாகசச் செயல் புரியும் இளம் பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

அதன்படி, நடபாண்டு,  துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவித்துள்ளது. துணிச்சலான வீர சாகச செயல் புரிந்த பெண்கள் http://awards.tn.gov.in என்ற இளையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.