சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா

தெலுங்கில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் மனம். இந்தப்படத்தில் நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நாகசைதன்யா, சமந்தா இருவரும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர். விக்ரம் குமார் படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆனதையடுத்து இயக்குனர் விக்ரம் குமாருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்த நாக சைதான்யா, ‛மனம் படத்திற்கு பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் விக்ரம்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக' தெரிவித்துள்ளார். தற்போது விக்ரம் குமார் இயக்கும் தேங்க்யூ என்ற படத்தில் நாக சைதன்யா நடிக்க அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.