“சென்னையில் 20 நாட்களில் 18 கொலைகள்… கொலைநகராக மாறும் தலைநகர்” – இபிஎஸ்

சென்னை: சென்னையில் கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வரும், எதிரக்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி, சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது.

காவல் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டம் – ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிகைகளின் கருத்துகளை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.


— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 24, 2022

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.