புதுடெல்லி:
டெல்லியில் காற்று மாசுபடுதலை குறைக்கும் வகையில் 150 இ- பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லியில் அடுத்த பத்து ஆண்டுகளில் மின்சார பேருந்தை பெறுவதற்காக டெல்லி அரசு ரூ. 1,862 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் மத்திய அரசு ரூ. 150 கோடி வழங்கியுள்ளது.
இந்நிலையில், டெல்லி முதல் -மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று இந்திர பிரஸ்தா டிப்போவில் இருந்து 150 இ – பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் கெலாட் உடன் ஒரு பேருந்தில் ஏறிய முதல் மந்திரி ராஜ்காட் கிளஸ்டர் பேருந்து நிலையம் வரை பயணித்தார்.
மேலும், ஒரு வருடத்தில் இரண்டாயிரம் இ- பேருந்துகளை பெறுவதே இலக்கு என்று அரவிந்த் ஜெக்ரிவால் தெரிவித்தார்.
மேலும், அவரது டுவிட்டர் பதிவில், “ மாசுபாடுக்கு எதிரான போராட்டத்தில் டெல்லி இன்று ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இன்று 150 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. நான் ஒரு பேருந்தில் பயணித்தேன். இந்த பேருந்தில் நவீன வசதிகள் உள்ளன. நீங்கள் அனைவரும் கண்டிப்பாக பிரம்மாண்டமான இ – பேருந்தில் பயணம் செய்ய வேண்டு” என்று பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. பகவந்த் மானின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை கண்ணீரை வரவழைத்தது- அரவிந்த் கெஜ்ரிவால் நெகிழ்ச்சி