பயங்கரவாத அமைப்புக்குஆள் சேர்த்தவர் சிக்கினார்| Dinamalar

மும்பை, : பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக புனே நகரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தானே நகரில் வசிக்கும் ஜுனைத் என்பவர் சமூக வலைதளங்கள் வாயிலாக, லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு இளைஞர்களை சேர்த்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், மஹாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தி, ஜுனைத்தை கைது செய்து, புனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை நடத்த ஜூன் 3ம் தேதி வரை பயங்கரவாத தடுப்பு படையினரின் காவலில் இருக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.