பீகாரில் சோகம் – லாரி கவிழ்ந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலி

பாட்னா:
பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டத்தில் உள்ள ஜலால்கர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த லாரி மேற்கு வங்காளம் சிலிகுரியிலிருந்து ஜம்முவிற்கு இரும்பு பைப்புகளை ஏற்றிக்கொண்டு சென்றது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும்,  படுகாயம் அடைந்த 8 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பூர்னியா போலீசார் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.