வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.!

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 26ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், மாநிலத்தில் நாளை வரையும், மே 27, 28 ஆகிய தேதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

நாளை வரை தென்கிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.