இந்திய அணியில் அறிமுகமாகாமல் பிளே ஆப் போட்டியில் சதம் – ரஜத் படிதார் சாதனை

கொல்கத்தா:
ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. 
இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 54 பந்துகளில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியில் அறிமுகம் ஆகாமல் ஐபிஎல் பிளே ஆப் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரஜத் படிதார் படைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.