இலங்கையில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயம்! வெளியாகியுள்ள தகவல்


அடுத்த மாதத்தில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றம் அறிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் டானியா அபயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இனி தங்களது தொழிலை நடத்த முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுவரை காலமும் சேமிப்பில் தங்களுடைய தொழில்களை நடத்தி வந்தோம்.

இலங்கையில் அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சியடையும் அபாயம்! வெளியாகியுள்ள தகவல்

எனினும்,தற்போது அதனை தொடர்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சடிக்கப்படுவதாகவும், எனினும், தனியார் துறை ஊழியர்களுக்கு என்ன நடக்கும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு பணம் அச்சடித்து ஊதியம் வழங்கினால், தங்களுக்கும் பணம் அச்சிட அச்சகம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.