எரிபொருள் விநியோக தடைகள் குறித்து பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம்

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை அச்சுறுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்ள மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நேற்று (24) வரை நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கோரப்பட்டிருந்த அனைத்து எரிபொருட்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்பதுன்ன தெரிவித்துள்ளார். அத்துடன் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பாக இதுவரையிலும் 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகச் செயற்பாட்டை முறையாக மேற்கொள்வதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படலாம் என்றும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.