குளத்தில் குளித்துக் கொண்டிருந்த அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கீழபூசாரிப்பட்டி கிராமத்தில், குளத்தில் குளித்துக் கொண்டிருந்த அண்ணன், தம்பி உட்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அண்ணாவி நகரைச் சேர்ந்த சகோதரர்களான முரளி, மணிகண்டன் என்னும் சிறுவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் என்ற சிறுவனுடன் சேர்ந்து பாப்பான்குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். 3 சிறுவர்களும் ஆளுக்கொரு திசையில் இருந்து குளத்திற்குள் குதித்த நிலையில், மூவருக்குமே நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர்.

அங்கிருந்த சிறுவன் ஒருவர் கொடுத்த தகவலின் படி குளத்திற்குள் இறங்கி சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட கிராம மக்கள், மூவரையும் சடலமாக மீட்டனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.