#தமிழகம் || பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளை., மூன்று ஜோடி கணவன் மனைவியை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்.! 

ஈரோட்டில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 தம்பதிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்த 3 தம்பதிகளை போலீசார் இன்று சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர். 

நீலப்பாளையம் விநாயகர் வீதியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர். இதற்கிடையே, அதே பகுதியில் மேலும் 2 வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

இதனை அடுத்து போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 3 தம்பதிகளை கைது செய்துள்ளனர்.

அதில் சூரியா-பாரதி, மணி-மீனா, விஜய்-லட்சுமி ஆகிய மூன்று தம்பதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் இருந்து 35 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.